Wednesday, February 13, 2013

எட்டு குணமுடையவர்

இறைவனிடம் மட்டுமே உள்ள எட்டு குணங்கள்.

1. அபஹதபரப் மத்வம் - தீவினையின்மை 
2. விரத்வம் - நரையின்மை 
3. விஸ்ருக்யுத்வம்  - மரணமின்மை.
4. விஸொகத் வம் - துயரமின்மை 
5. விஸீகத் ஸத்வம் - பசியின்மை 
6. அபிபாஸத் வம் - நீர் வேட்கயின்மை 
7. சத்ய காமத் வம் - உண்மை தவறாமை 
8. சத்யங்கல்பத் வம் - கொண்ட கொள்கை தவறாமை.

பஞ்சபூதத் தளங்கள்

பஞ்சபூதத் தளங்கள் 

1. பிருதிவி (மண்) திருவாரூர், காஞ்சிபுரம்.
2. வாயு (காற்று) திருக்காளத்தி ( காளஹஸ்தீ).
3. தேயு (நெருப்பு) திருவண்ணாமலை 
4. அப்பு (நீர் ) திரு ஆனைக்கா,
5. ஆகாசம் ( ஆகாயம்) தில்லை (சிதம்பரம்)

18 சித்தர்கள்

18 சித்தர்கள் 

1.நந்தீசர், 2.பொதிகை முனி, 3.புலத்தியர், 4.பாம்பாட்டி சித்தர், 5.இடைக்காடர், 6.கோரக்கர், 7.இராமதேவர்,8.சட்டை நாதர், 9.கமலமுனி , 10.புண்ணாக்கீசர், 11.காலங்கிச் சித்தர், 12.போகர், 13.கொங்கணர், 14.கருவூரார், 15.திருமூலர், 16.மச்சமுனி, 17.அழுகண்ணர், 18. புலிப்பாணி 

துளசிச் செடி

துளசிச் செடி 

துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பது ஆரோக்கியத்தைத் தரும். 
மற்ற செடி, மரம், கொடிகள் எல்லாம் பகலில் கார்பன்டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும், இரவில் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன்டை ஆக்சைடை வெளியிடும். நாம் எப்போதும் ஆக்சிஜனை சுவாசித்து கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகின்றோம். ஆகவே வேறு செடிவகைகளை வீட்டில் வைப்பது அழகாக இருக்கும் ஆனால் ஆரோக்கியமாக இருக்காது. ஆனால் துளசிசெடி மட்டும் பகலும் இரவும் நாம் வெளிவிடுகின்ற கார்பன்டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை மட்டுமே எப்பொழுதும் வெளிவிடுகிறது. ஆகவே தான் இந்தியாவில்  அதிகமானவர்களின்  வீடுகளிலும் துளசிச்செடியை வைத்து வணங்குவதை பார்க்கலாம். நீங்களும் துளசி செடியை வளர்த்து ஆரோக்க்யமாக வாழ வாழ்த்துகின்றேன்.

Monday, February 11, 2013

இறைவனின் ஐந்தொழில்கள் 5

இறைவனின் ஐந்தொழில்கள் 5

5: அருளல் 

உயிர் மீது படிந்த பாசம் மடிந்தபின் ஞானம் பிறக்கிறது. உயிர் கடவுளை நாடுகிறது. தூய்மை அடைந்த ஆன்மாவை நிலையான இன்பம் அனுபவிக்குமாறு செய்வதே அருளல் எனப்படும்.

இறைவனின் ஐந்தொழில்கள் 4

இறைவனின் ஐந்தொழில்கள் 4

4: மறைத்தல் 

உயிர்கள் வினைப் பயன்களை ஒரே பிறவியில் தீர்த்துக் கொள்வது இயலாது. இதனால் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க வேண்டியிருப்பதாயிற்று. இவ்வாறு பிறவி எடுப்பதில்  உயிர்கள் வெறுப்படையாது, பாசம் தேயுமளவு அவர்களின் வினைப்பயனை அனுபவிக்குமாறு, உயிர்களை அதில் ஆழ்த்துவதே மறைத்தல் எனப்படும்.

இறைவனின் ஐந்தொழில்கள் 3

இறைவனின் ஐந்தொழில்கள்3

3: அழித்தல் 

உயிர்களுக்கு இறைவன் அளித்த தனு, கரண, புவன, போகங்களை நீக்குதலே அழித்தல் எனப்படும்.

இறைவனின் ஐந்தொழில்கள் 2

இறைவனின் ஐந்தொழில்கள் 2

2: காத்தல் 

உடம்பு பெற்ற உயிரானது செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப, வினைப் பலனை அனுபவிக்க செய்தாலே காத்தல் எனப்படும்.



சிவலிங்கத்தின் சிறப்பு 5

சிவலிங்கத்தின் சிறப்பு 5

உலோகத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபட்டால் தர்மங்கள் வந்தடையும். பித்ரு சாபங்கள் நீங்கும்.

சிவலிங்கத்தின் சிறப்பு 4


சிவலிங்கத்தின் சிறப்பு 4


இரத்தினத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபட்டால் இலட்சுமி கடாக்ஷம் உண்டாகும். குபேரன் உங்கள் கூடவே வருவார்.

சிவலிங்கத்தின் சிறப்பு 3


சிவலிங்கத்தின் சிறப்பு 3


பவளத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தைப் பூஜித்தால் நிலையான செல்வப் பேறு உண்டாகும், வெற்றிமேல் வெற்றி கிட்டும்.

சிவலிங்கத்தின் சிறப்பு 2

சிவலிங்கத்தின் சிறப்பு 2

மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை போஜிப்பவர்கள், தான்விரும்பிய பொருளையெல்லாம் பெறுவார். கல்லினால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அர்ச்சிப்பவர்கள் நினைத்த சித்திகளை அடைவர்.

சிவலிங்கத்தின் சிறப்பு

சிவலிங்கத்தின் சிறப்பு 

சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்த ஒருவனை பார்த்து, தானும் அதுபோல் சிவலிங்க பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று எவன் ஒருவன் விரும்புகின்றானோ, அப்பொழுதே அவன் பரமபுண்ணியனாகித் தான் செய்த பாவங்களை எல்லாம் ஒழித்து, முக்தி அடைவதற்குரிய தகுதியைப் பெற்று விடுகின்றான்.

இப்படித்தான் நீராட வேண்டும்.

இப்படித்தான் நீராட வேண்டும்.

குளிப்பதற்கு முன் இருகைகளாலும் தண்ணீரை அள்ளி சர்வ புன்னியதீர்தங்களையும் அதன் அதிபதி வர்ணதேவனையும் அன்புடன் அந்த கையில் உள்ள நீரில் வரும்படி கேட்டு, அந்த நீரை குளிக்கவைத்திருக்கும் வாலியில் ஊற்றவேண்டும், இது போல் மூன்று முறை செய்துவிட்டு, அந்த வாலி தண்ணீரிடம் , உங்களுடைய தேகத்தையும், பஞ்ச கோசத்தையும், அதாவது ஐந்து தேகத்தையும் ஆரோக்கியமாக இருக்க தூய்மை செய்யுமாறு கேட்டுவிட்டு, பின் குளிக்க வேண்டும். இதனால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கண் திருஷ்ட்டி, மற்றும் நோய்கள் குணமடையும். இப்படித்தான் குளிக்க வேண்டும்.

Thursday, February 7, 2013

இறைவனின் ஐந்தொழில்கள்

இறைவனின் ஐந்தொழில்கள் 

1. படைத்தல் 

உயிர்களை கடவுள் படைத்து அந்த உயிர்களுக்கு தனு, கரண , புவன, போகங்களை கடவுள் கொடுத்தலே படைப்பு எனப்படுகிறது.

துணிவு


Wednesday, February 6, 2013

எது எதை நீக்குகிறது.


எது எதை நீக்குகிறது.

உழைப்பு தரித்திரத்தை நீக்குகிறது, தியானம் பாபத்தை நீக்குகிறது, மௌனம் கலங்கங்களை நீக்குகிறது, விழிப்புணர்வு பயத்தை நீக்குகிறது.

தெய்வத்தை எங்கே காண்கின்றனர்.


தெய்வத்தை எங்கே காண்கின்றனர்.

யாகம் செய்ய ஆசைபடுபவர்கள், தெய்வத்தை அக்னியில் காண்கின்றனர். தபம் செய்பவர்கள் இதயத்திலும், உருவவழிபாடு செய்பவர்கள் விக்கிரகத்தில் தரிசிக்கின்றனர். ஆனால் ஞானிகளோ தெய்வத்தை எங்கும் தரிசிக்கின்றனர்.


இழந்ததை பெற, விபத்து ஏற்ப்படாமல் இருக்க.


இழந்ததை பெற, விபத்து ஏற்ப்படாமல் இருக்க.

இழந்ததை பெற, விபத்து ஏற்ப்படாமல் இருக்க.
 சிவாலயத்தில் இருக்கும் கால வைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணிக்குள், (ராகு காலத்தில்) தொடர்ந்து நெய்விளக்கு தீபமேற்றி வழிபட உடன் பலன் உண்டாகும்.


சனி பாதிப்பு நீங்க


சனி பாதிப்பு நீங்க 

சனியினால் ஏற்படும் பாதிப்பிற்கு வெள்ளி இரவு சிறிது எள்ளை எடுத்து தலைக்கடியில் வைத்து படுத்து, பின் சனிகிழமை அந்த எள்ளை சோற்றுடன் கலந்து காகத்திற்கு வைக்க சனி பாதிப்பு நீங்கும்.


திருமணத் தடை அகல

திருமணத் தடை அகல 

கன்று ஈனும் நிலையில் இருக்கும் பசுவை சுற்றிவந்து வணங்கினால், திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.


சூரிய வழிபாடு

சூரிய வழிபாடு 

சூரியனை உதயகாலத்தில் இந்திரனும்,  மதியம் வாயுவும், மாலை சந்திரனும், இரவில் பிரம்மன், விஸ்ணு, மற்றும் ருத்திரன் ஆகியோர் வணங்குகின்றனர். 

ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்திரம் கூறி சூரியனை வணங்கினால் அனைத்திலும் வெற்றிபெறலாம். சூரியனை நாள்தோறும் வணங்கினால்  உடல்நலம், மனபலம் பெறலாம்.

சூரிய உதயத்தின் பொது, சூரியன் உதிக்கும் திசை பார்த்து 

'ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே  சதா' என்று சொல்லி வணங்க ஆயுள் கூடும், கண்நோய் வராது, தோல் நோய் விலகும்.

வாஸ்து தோஷ பரிகாரம்

வாஸ்து தோஷ பரிகாரம் 

வெளிநாடுகளில் உள்ள கூடுதலான வீடுகளில் அல்லது Apt டில் வாஸ்து தோஷம்  இருப்பதால், அதற்கு மிக சுலபமான பரிகாரம். ஸ்வர்ண அலங்காரம் செய்யப்பட்ட வெங்கடாஜலபதி படத்தை வாசலுக்கு நேர் எதிரே வைத்திட வாஸ்து தோஷம் நீங்கும்.

சிவ வழிபாடு

சிவ வழிபாடு 

திங்கட்கிழமை: 
வெள்ளை பூவின் இதழ்களால் அர்ச்சனை செய்து, வெண்பொங்கல் படைத்தல் சிறப்பைத்தரும்.

இரத்தம் சுத்தமடைய

இரத்தம் சுத்தமடைய 

தண்ணீரை சூடாக்கி ஆறவைத்து அந்த நீரில் துளசி இலையை போட்டுவைத்து ஊறியபின் அந்தநீரை குடித்தால் இரத்தம் சுத்தமாகும். இரத்தத்தில் அதிகமாக இருக்கும், சீனி, பித்தம், உப்பு போன்றவை குறைந்துவிடும்.
பேரீச்சம்பழம் 

இரவில் இரண்டு பேரீச்சம்பழம் பாலும் குடித்துவந்தால் பெண்களின் கர்ப்பபையில் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பர் . ஆண்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை இரவில் இரண்டு சாப்பிட்டுவர நல்ல ஆரோக்கியத்துடன் இருபபர் . தைராய்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

யாரை வணங்குவது

யாரை வணங்குவது 

தடைகள் நீங்கி வெற்றிபெற:  விநாயகர் 
அழகு, வீரம், ஞானம் பெற:  முருகன் 
அனைத்துசக்தியும் பெற்று வீரத்துடன் இருக்க: அம்பிகை 
இவ்வுலக எல்லா இன்பங்களும் பெற: திருமால் 
செல்வம் பெற: திருமகள் 
கல்வி பெற: சரஸ்வதி 
முக்தியைப் பெற: சிவபெருமான்.

சாப்பிடும்போது கவணிக்க.

சாப்பிடும்போது கவணிக்க.

சாப்பிடும்போது பேசக்கூடாது. தொலைக்காட்சி பார்க்கக்கூடாது.பேசக்கூடாது. தண்ணீர் குடிக்கக்கூடாது, அவசரம் என்றால் மட்டும் சிறிது தண்ணீர் குடிக்கவும், குறைந்தது சாப்பிட்டு அரை மணித்தியாலத்திற்கு பின் தான் தண்ணீர் குடிக்கலாம். கர்ப்பிணி பெண்கள் மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும், ருசித்து சாப்பிடவேண்டும். யாரும் நின்றுகொண்டு சாப்பிடக்கூடாது .

பெற்றோரே தெய்வம்

பெற்றோரே தெய்வம் 

பெற்றோரை சரியாக கவனிக்காத பிள்ளைகள் வாழ்கையில் தோல்வியையே சந்திக்கின்றனர் . தாயை கவனிக்காதவர் பல நோய்களாலும், தந்தையை கவனிக்காதவர் பொருளாதாரத்தாலும் பாதிப்படைவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

துயில் எழ எது சரியான நேரம்.

துயில் எழ  எது சரியான நேரம்.

சூரிய உதயத்திற்கு முன் படுக்கையை விட்டு எழ வேண்டும். இதனால் நரம்பு தளர்ச்சி, இரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பூஜை அறை

பூஜை அறை 

பூஜை அறையில் தெய்வ படங்களை  கிழக்கு  திசை பார்த்து வைக்கவேண்டும்.  வடக்கு திசை பார்த்து வைக்கக்கூடாது.
இயலாத சூழ்நிலையில் திருமாலை தெற்கு திசை பார்த்து வைக்கலாம்.
மற்ற தெய்வங்களை மேற்கு பார்த்து வைக்கலாம்.