Thursday, March 31, 2011

சைவத்தின் சரிதம். பூ.ஜெயராமன் 2

2 . காஷ்மீர சைவம்
 காஷ்மீரத்தைச் சேர்ந்த தத்துவ தரிசிகளால் தொற்றுவிக்கப்பட்டுப் பெரும்பாலும் அப்பகுதியிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படும் சைவத்திற்குக் காஷ்மீர சைவம் என்று பெயர். இதற்குத் திரிக, ஸபந்தபிரத்யபிஜ்ஞா என்றும் பல பெயர்கள் உண்டு. பதி - பசு - பாசம் என்னும் மூன்று பொருள்களும் ஒன்றாய்க் கொண்டு விளங்கும் தத்துவம் 'திரிக' எனப்படுகிறது. சிவம் - சக்தி - அணு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து இருப்பதாலும் இப்பெயர் பெறுகிறது என்று சொல்வர். முழுமையான ஒன்று என்பதிநின்றும் உலகின் பன்மை நிலைக்கு மாறும் கொள்கையைக் கொண்டிருப்பதை 'ஸ்பந்த' என்பது குறிப்பிடுகிறது. பிரத்யபிஜ்ஞா என்பது முற்றொருமை; அதாவது ஆன்மா தன்னைச் சிவத்துடன் ஒருமைப்படுத்திக் கொள்ளும் வழியினை அடையாளங் கண்டு தெளிந்திடும் நிலையைச் சுட்டுகிறது என்கின்றனர்.
               
இரு பிரிவுகள் 

காஷ்மீர சைவத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று ஸ்பந்த சாஸ்திரத்தையும், மற்றொன்று பிரத்யபிஜ்ஞா சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு உள்ளன. ஸ்பந்த சாஸ்திரத்திற்கு அடிப்படையாகக் கொண்டு உள்ளன. ஸ்பந்த சாஸ்திரத்திற்கு மூலவர்கள் வசுகுப்தரும் அவரது சீடர் கல்லதரும் என்கிறது சான்றுகள். இதன் ஆதார நூல்கள் 1 . சிவசூதிரம் அல்லது சிவசூதிராமணி, 2 .ஐம்பத்தொரு செயுல்களைகொண்ட ஸ்பந்தகாரிகை ஆகியன ஆகும். முதலாவது நூலைச் சிவனே வசுதேவருக்கு வெளிப்படுத்தினர் என்பது மரபு. சித்தர் அல்லது மானிட உருக்கொண்டு வந்து இதை வெளிப்படுத்தியதாகக் கூறுவார். இச்சூத்திரங்கள் மகாதேவமலை என்னும் இடத்தில் சிவனே வசுகுப்தரை அங்கு அழைத்துச் சென்று காட்டிக் கொடுத்ததாகவும் சொல்வதுண்டு. கடவுள் கனவில் வந்து சொன்னதாகவும் கூறுவதுண்டு.

              இரண்டாவது நூலைப்பற்றியும் இப்படிப்பட்ட மரபுவழிச் செய்திகள் உள்ளன. ஒன்று வசுகுப்தர் செய்தார் என்றும், இன்னொன்று கல்லதர் இயற்றினார் என்றும், பிறிதொன்று இந்தக் கொள்கைகளை வசுகுப்தரிடமிருந்து பெற்ற கல்லதர் தம் மாணவர்களுக்குக் கற்றுத் தந்திடவே சாரிகை ஆக்கித்தந்தார் என்றும் சொல்லப்படுகிறது. கல்லதர் அவன்திவர்மனின் ஆட்சிக்காலத்திலும் (கி பி 854 ). வசுகுப்தர் அவருக்கு முந்தியும் இருந்தவர்களாவர்.

ப்ரத்ய பிஜ்ஞா நெறியைத் தோற்றுவித்தவர் சோமனந்தர். இவர் இயற்றிய நூல் சிவதிருஷ்டி. ஆயினும் இந்நெறியின் தலைமை சான்ற சாத்திரத்தை உதயகரர் என்பவர் சூத்திர வடிவில் செய்யுள்களாக இயற்றியுள்ளார். இச்சூதிரங்களுக்கு விரிவுரைகளும் வியாக்கியானங்களும் செய்தவர் அபினவகுப்தர். இவர் இயற்றிய நூல் பரமார்ந்த சாரம் எனப்படும். இவர் கி பி 993 -1015 ஆண்டுகளுக்கு இடையில் நூல் செய்தார் என்பர்.

முடிந்த உண்மைப் பொருள் 

காஷ்மீர் சைவத்தின்படி சிவன் அல்லது சம்புதான் முடிந்த உண்மைப் பொருள். அசையும் பொருள், அசையாப்பொருள் ஆகிய அனைத்துப் பொருள்களின் ஆன்மாவைத் திகழ்பவரும் அவரே. அவர் எங்கும் கலந்த தன்மையராயும் (விஸ்வமய), எதையும் கடந்த நிலையினராயும் (விஷ்வோத்திர்ண) விளங்குகிறார். அவர் தூய உணர்வினர் (சைதன்ய ). முழுமையாய் அனுபவிக்கத்தக்கவர் (பரமேஸ்வர்), அவரிடம் இருந்துதான் இந்த உலகம் தோன்றுகிறது.

              காட்சிப் பொருளாயினும் சரி, பிரதிபளிப்பாயினும் சரி, எவ்வாறு சாறு, பாகு, வெள்ளம், சர்க்கரை, கற்கண்டு என்று எல்லாம் கரும்புச் சாற்றிலிருந்து ஒவ்வொன்றாய்த் தோன்றுகின்ற்னவோ அவ்வாறே வெவ்வேறு நிலைகளில் தோன்றுபவர் தலைமை நிலைக்கு ஏற்ப ஆன்மாவைத் திகழும் சம்பு என்னும் ஒருவரே என்பார் அபினவகுப்தர், கண்ணாடியில் தெரியும் காட்சிகளைக் கண்ணாடியினின்ரும் பிரிக்க முடியாது. ஆனால், அக்காட்சிகள் ஒன்ரினின்றும் ஒன்று வேறுபட்டவை. அதுபோல பரம்பொருளான பைரவரின் தூய முழுமைக் காட்சியிலிருந்து இந்தப் பிரபஞ்சம் வேற்றுமையின்றித் தோன்றினும் ஒவ்வொரு பகுதியும் வேறுவேறு, காட்சியும் வேறு வேறுதான். 

உலகப்படைப்பு

            இந்தப் பேருலகம் அவரது ஆற்றலால் வெளிப்படுவது இவ்வாற்றல் சக்தி எனப்படும். இது   ஐந்து வகைப்படுகிறது. 1 சித் சக்தி = தன்னொளி அல்லது தெளிவு ஆற்றல்; 2 ஆனந்த சக்தி = ஆனந்தமயமான சுதந்தர ஆற்றல்; 3 இச்சா சக்தி = விருப்பு அல்லது வேட்கை ஆற்றல்; 4 ஞான சக்தி = அறிவு ஆற்றல்; 5 கிரியா சக்தி = செய்கை அல்லது வினை ஆற்றல். தம் சொந்த விருப்பின் மூலம் (ஸ்வேச்சயா) இச்சக்திகளால் சிவன் வெளிப்படுகிறார். இவற்றைத் தாங்கியும் நிற்கிறார். (ஸ்வபித்தாவ்). அவர் சுதந்தரறாய், தமது விருப்பின் ஆற்றலினால் இருக்கும் பொருள்கள் யாவற்றையும் தோற்றுவிக்கிறார். இவ்வுலகையும் படைக்கிறார். அவர் தம்மிளிருந்து இந்த உலகைதொன்றச் செய்கிறார். அது உண்மையில் அவரினின்றும் வேறுபட்டது இல்லை. கண்ணாடியில் தோன்றும் வீடுகளும் நகரங்களும் இப்படி கண்ணாடியைப்பாதிப்பதில்லையோ அப்படித்தான் இந்த உலகத் தோற்றமும் அவரைப் பாதிப்பதில்லை. இதிலிருந்து இந்த உலகை உருவாகுவதற்குக் கடவுளுக்கு 'தர்மம்' எனப்படும் தூண்டும் (மூல காரணமோ, 'பிரதான' எனப்படும் முதற் (உபாதான) காரணமோ தேவை இல்லை என்பது நமக்கு விழங்குகிறது. ஆகவே கடவுளே முதற் காரணமாய் இருந்து உலகைத் தோற்றுவிக்கிறார் என்னும் வேதாந்த சூத்திரக் கொள்கையும், சங்கரரது மாயை என்னும் திரிபுகாட்சி தத்துவமும் காஷ்மீர சைவத்துக்கு உடன்பாடில்லாமல் உள்ளது.

அடுத்த பகுதியில் நாம் பார்க்கவிருப்பது ஆன்ம விடுதலை.                   
     

Tuesday, March 29, 2011

சைவத்தின் சரிதம். பூ.ஜெயராமன் 1

சைவத்தின் சரிதம் 


நன்றி
பூ.ஜெயராமன் மற்றும் அனுராகம்.

1 . வரலாற்றுப் பின்னணி 

இந்திய நாட்டில் வழங்கி வரும் மிகப் பழமை வாய்ந்த வழிபாடுகளுள் சிவ வழிபாடும் ஒன்று. இவ்வழிபாடே சைவம் என மலர்ச்சியுற்றது. சிவனை முதல்வனாகக் கொண்டு வழிபடும் சமயங்கள் பல உள்ளன. தமிழ்ச் சைவசித்தாந்த நூல்களில் பாசுபதம், மகாவிரதம், காபாலம், வாமம், பைரவம், ஐக்கியவாதம் என ஆறு அகப்புறச் சமயங்களையும் பாஷானவாதம், பேதவாதம், ஈசுவர அலிகார வாதம் சிவசமவாதம், சிவசங்கிராந்த வாதம், சிவாத்துவிதவாதம்  என ஆறு அகச்சமயங்களையும் குறிப்பிடுவர். இன்னும் சங்கர மடத்தினர் அத்வைதத்தின் பெயரால் சைவ சமயத்தையே பின்பற்றுவதையும் காணலாம்.
இந்தியாவில் பெரு வழக்கிலுள்ள இச்சமயம் இந்நாட்டின் பெரும்பான்மைச் சமயம் (Majority religion ) என்றால் அது மிகையாகாது.

              சிவ வழிபாடு ருக் வேதத்தில் இருந்தே தொடங்குகிறது. அதில் சிவன் என்னும் பெயர் கையாளப்படவில்லை. அவன் ருத்திரனாய்க் காட்சி அளிக்கிறான். ருத்திரன் விண்ணையும் மண்ணையும் ஊடுருவிச் செல்லும் அம்புகள் உடையவனாகவும் (VII 46 .3 ) பசுக்களையும் மக்களையும் கொல்லும் ஆயுதங்களைத் தாங்கியவனாகவும் ( I , 114 , 10 ) இடியினால் உயிர்ச்சேதங்கள் இழைப்பவனாகவும் (II , 33 .14 ) விளங்குகின்றான். அவன் நோய்களைச் செர்ப்பவனாகவும் தீர்ப்பவனாகவும் தீர்பதற்குரிய மருந்துகள் உடையவனாகவும் (I 43 .4 ) மருத்துவர்களுக்கும் மிகச்சிறந்த மருத்துவனாகவும் ( II 33 .4 ) ஆயிரம் மருந்துகளை உடையவனாகவும் ( VII 46 .3 )சித்திரிக்கப்படுகின்றான். அதனால் மக்கள் தங்களை அழிவினின்றும் காத்திடுமாறு அவனை வேண்டுகின்றனர். 'ருத்ரனே சினத்தினால் எங்கள் பிள்ளைகள், சந்ததியினர், மக்கள் மாடுமனைகள் ஆகியவர்களுக்கு ஊறு விளைவிக்காதே! எங்கள் மக்களையும் கொல்லாதே! நாங்கள் என்றும் உனக்குக் காணிக்கை செலுத்தித் தொழுகிறோம்' (1 .114 .8 ) என்று வழிபடுகின்றனர்.
               இவ்வாறு பயத்தினாலும் அச்சத்தினாலும் பீடிக்கப்பட்டபோது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ருத்ரனை நினைத்தான். வேண்டினான், வணங்கினான மனிதன். இவை பின்னால் ருத்திரன் எங்கும் நிறைந்த பரம்பொருளாக மாறுவதற்கான காரணங்களாயின. மக்களின் வாழ்க்கையில் அச்சத்தினால் அவதிப்படும் நிகழ்ச்சிகள் ஏற்ப்படுவதுண்டு. தோற்று நோய்களும் மற்ற நோய்களும் வரும்போது அஞ்சுகிறான். இடி மின்னலினால் தாக்குறும் போது நடுங்குகிறான். புயல் மழையினால் தாக்குறும் போது பதறுகிறான். இவற்றை அளிக்கும் கடவுளை அடிக்கடி நினைக்கிறான். ஆகவே காக்க வருமாறு மற்ற கடவுல்களினும் மேலாக இக்கடவுலையே அடிக்கடி வேண்டுகிறான்.
            இப்படிக் கடவுள் நிலைக்கு உயர்ந்தவனே ருத்ரன். மனிதனின் அடிமனதில் குடிகொண்டிருந்த அச்ச உணர்வு என்னதான் மறைக்க முயன்றாலும் முடியாமல் மேலெழுந்து உருத்துவதன் விளைவாக உருவானவனே உருத்திரன் என்னும் ருத்திரன். அவனே பின்னர் மங்கலமயமாக்கப்பட்டுச் சிவமயமாகின்றான் என்கின்றனர் ஆய்வாளர்.
           யஜுர் வேதத்தின் பகுதியான சடருத்த்ரியத்தில்தான் ருத்ரன் சிவனாகக் காட்சி அளிக்கிறான். 'மங்கல வடிவினனும், அடைந்தாரையும் சிவமாக்கும் மங்கலம் மிக்க வடிவினனும் ஆகிய நினக்கு வணக்கம்!' என்று அதில் வருகிறது. ருத்ரன் அச்சந்தரத் தக்கவனாய் இருந்தும் மங்கலம் சேர்க்கும் சிவனாக மாறும் பொருட்டு வணங்கப்பருகிறான். பின்னர் சிவன் என்னும் பெயர் வேதங்களின் பிற்பகுதிகளில் சிறப்புப் பெரும் பெயரானது.
இறுதியில், ச்வேதாச்வதர உபநிஷத்தில் இச்சிவன் பிரமம் என்னும் நிலைக்கு உயர்ந்து முழுமுதற் கடவுளாகிறான். 'வேதங்களை வெளிப்படுத்தி அனைத்து உயிர்களையும் வாழ்விக்கும் ருத்ரனே! அச்சத்தையும் பாவத்தையும் போக்கும் மங்கலமான திருமேனியால் ( சிவதானு) எங்களை இன்புறச் செய்வாயாக! (III 5 ) என்று வேண்டப்படும் ருத்ரன், 'உலகம் யாவையும் தமது சொந்த ஆற்றலால் காத்து ஆள்பவன் ருத்ரன். அவனை இரண்டாமவன் ஆக்ககூடியவர் வேறு எவரும் இல்லை. அதாவது சிவனுக்கு மேல் ஒருவர் வந்து அவரை இரண்டாவது இடத்திற்கு தள்ளக்கூடியவர் இது வரை யாரும் இல்லை. அவன் ஒவ்வோர் உயிருள்ளும் நிலைத்திருக்கிறான். உலகங்கள் யாவையும் வெளிப்படுத்திக் காத்து இறுதிக்காலத்தில் தனக்குள் ஒடுக்கிக் கொள்பவன்' அவனே!, (VI . 2 ) என்று பரம்போருளாகத் தொழப்படும் நிலையைப் பெறுகிறான். இப்படி ருத்ரனும் சிவனும் ஒன்று பட்டுச்சிவனாக முகிழ்ந்தவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சைவசமயம் உருப்பெற்றது. 
              இந்தச் சைவ சமயம் தத்துவ அடிப்படையில் பல வகையினதாகப் பிரிந்துள்ளது. அவற்றுள் மிகவும் புகழ் வாய்ந்தவையாக இருப்பவை வடக்கில் வாழும் (இந்தியாவின் வடபகுதியில்) காஷ்மீர சைவம். கன்னடத்தில் வழங்கும் (கர்நாடகா மாநிலத்தில்) வீர சைவம் எனும் லிங்காயதம், தமிழகத்தில் திகழும் சைவ சித்தாந்தம் ஆகியவையாகும். 

இனி நாம் காஷ்மீர சைவம், வீர சைவம், சைவ சித்தாந்தம் ஆகிய மூன்றையும் தனித்தனியாக விரிவாகப் பார்ப்போம்.

காஷ்மீர சைவம் அடுத்த தொடரில் பார்ப்போம்.     
   

Sunday, March 27, 2011

திருச்சிற்றம்பலம் 6

திருக் கேதீசுரப் பதிகம்
1    
விருதுகுன்றமா மேருவினாணர வாவன லெரியம்பாப்
போருதுமூவெயில் செற்றவன்பற்றிய நின்றுரைப்பதியெந்நாளாம்  
கருதுமூவெயில் கனைகடர்கடிகமழ் பொழிலனிமா தோட்டம்
கருதநின்றகே தீச்சரங்கைதொழக் கடுவினையடையாவை 
பாடல்வீனையர் பல பலசரிதைய ரெருதுகைத்தரு நட்டம்
ஆடல் பேனுவரமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர் 
இடமாவது விருங்கடற்கரையினி லேழிறிகழ் மாதோட்டம் 
கேடிலாதகே தீச்சரந் தொழு தெழக் கெடுமிடர் வினைதானே 
பெண்ணோர் பாகத்தர் பிறை தவழ் சடையின ரறைகழல் சிலம் பார்க்கச்
சுன்னமாதிரித் தாடுவர் பாடுவ ரகந் தொறு மிடுபிச்சை 
ருண்ணலாவதோ ரிச்சையினுழல் பல ருயர் தரு மாதோட்டத் 
தண்ணனண்ணுகே தீச்சரமடைபவர்க் கருவினையடையாவே 
பொடிகொண்மேனியர் புலியதளரையினர் விரிதருகரத் தேந்தும் 
விடிகொண் மூவிலை லேலினர் நூலினர் மறிகடன் மாதோட்டத் 
தடிகளாதறித் திருந்த கேதீச்சரம் பரிந்த சிந்தையராகி 
முடிகள் சாய்த்தடி பேணவல்லார் தம் மேன் மெய்த்தெழும் வினைபோமே 
நல்லராற்றவு ஞான நன்குடயர்தம் மடைந்தவர்க் கருளிய 
வல்லார்பார்மிசைவான் பிறப்பிப்பிலர் மலிகடன் மாதோட்டத் 
தேல்லையில்புகழந்தை கேதீச்சர மிராப்பகனினைந்தேத்தி
அல்லலாசறுத் தரனடியினை தொழுமன் பராமடியாரே 
பேழைவார்சடைப் பெருந்திரு மகடனைப் பொருந்தவைத்தொரு பாகம்
மாழையங்கயற் கன்னிபாலருளியர் பொருளினர் குடிவாழ்க்கை 
வாழையம் பொழின் மந்திகள் களிப்புற மருவியமா தோட்டக் 
கேழல்வேண் மருப்பணிந்த நீண்மார்பர்கேதீச்ச்சரம் பிரியாரே 
பண்டுநால்வருக் கரமுரைத்தருளிப்பல் லுலகினிலுயிர் வாழ்க்கை 
கண்டனாதனார் கடலிடங்கை தொழக் காதலித்துறைகோயில்
வண்டுபன்செயு மாமலர்ப் பொழின மஞ்சை நடமிடு மாதோட்டம் 
தொண்டர் நாடொறுந் துதிசெயவருள் செய்கே தீச்சர மதுதானே
தென்னிலங்கையர் குலபதிமலை நலிந்தெடுத் தவன்முடி திண்டோள் 
தன்னலங்கேட வடர்த்தவர்க்கருள் செய்த தலைவனார் கடல்வாயப் 
போன்னிலங்கிய முத்துமாமணிகளும் பொருந்தியமாதொட்டத்
துன்னியன் பொடு மடியவரிறைஞ்சுகே தீச்சரத்துள்ளாறே                                
   9 
வுளானுமப் பொருகடல் வண்ணனும்புவியிழந் தெழுந்தோடி
மேவிநாடிநுன் னடியிணைகான்கிலா வித்தக மேன்னாகும்   
மாவும் கமுங் கதலியுநெருங்குமா தோட்டன்கர் மன்னிதி
தேவிதன்னோடுந்திருந்து கேதீச்சரத்திருந்தவெம்பெருமானே
10 
புத்திராய்ச்சில புனை துகிலுடையவர் புரனுரைச்சமனாதர்
எத்தராகி நின் றுன்பவரியம்பிய வேழைமைகேளேன் மின் 
மத்தயானையை மருகிடவுரி செய்து போர்த்தவர் மாதோட்டத் 
தத்தர்மன்னுபா லாவியினகரையிற்கே தீச்சரமடைமின்னே 
11 
மாடெலாமான முரசெனக்கடலின தொலிசுவர் மாதோட்டத்
தாடலேருடை யண்ணல் கேதீச்சரத் தடிகளை யணிகாழி 
நாடுளார்க்கின்ற ஞானசம்பந்தன் சொனவின்றெழு பாமாலைப் 
பாடலாயின பாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே.   

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்.
ஓம் நமசிவாய நாமஹ

நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய 
பஸ்மாங் கராகாய மகேச்வராய
நித்யாய சூத்தாய திகம்பராய
தஸ்மை  நகாராய நமச்சிவாய 

மந்தாகிணீ சலில சந்தன சர்ச்சிதாய 
நந்தீஸ்வர ப்ரமத நாத மகேச்வராய 
மந்தார முக்ய பஹூ புஸ்ப சூபூஜிதாய 
தஸ்மை மகார மஹிதாய நமச்சிவாய 

சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருந்த
சூர்யாய தக்சாத்வர நாசகாய 
ஸ்ரீ நீலகண்டாய வருஷத்வஜாய 
தஸ்மை சிகாராய நமச்சிவாய 

வசிஷ்ட கும்போத்பவ கௌதமாதி 
முனீந்திர தேவார்ச்சித்த சேகரைய 
சந்த்ராக்க வைச்வாணர லோசனாய 
தஸ்மை வகாராய நமச்சிவாய 

யக்சஸ்வரூபாய ஜடாதராய பினாக 
ஹஸ்தா சனாதனாய 
திவ்யாய தேவாய திகம்பராய 
தஸ்மை யகாராய நமச்சிவாய 

பிரதோஷ வேளையில் பாட வேண்டிய பரமன் பாடல் 

மங்களம் தந்திடும் பரமனின் திருவடி 
நம்மனம் தன்னில் இருத்தியே துதிப்போம் 
சந்தியா காலத்து பிரதோஷ நாயகன் 
கங்கன பிரியன் சிவநம சிவயன்

கிள்ளை கரமதில் பிடித்திடும் இமையுடன் 
பிள்ளையை ஒருசேர பணிந்திடும் அடியர்க்கு
தில்லையில் நடித்திடும் திருமறை இறையவன் 
இல்லையென் ட்ரோதே திருவருள் தருவான் 

ஆடிடும் பாதம் தேடிடும் கண்கள் 
நாடிடும் மனமோ கூடிடும் இசையில் 
வாடிடும் வாழ்வில் சேர்ந்திடும் வளங்கள் 
பாடிடும் சூடிடும் பரமனை நெஞ்சம் 

ஹரஹர சிவசிவ தாண்டவ சங்கர 
புரஹர நமசிவ குண்டலங்களை 
நரஹர நடனம னோஹர ரஞ்சித
கரஹர திகபர ஆண்டவா வல்லபா

தும்புரு நாரதர் தம்புரு மீட்டி
இன்புற பாடிய தீநிற அண்ணலே 
துன்புறம் வாழ்வில் நிம்மதி தந்திடும் 
அன்புடை கோவே அருள்வாய் சிவனே

தாம்ததிம் தகயென ஆடிடும் நாதா
சாம்பச தாசிவ சத்குரு தேவா
பாம்பினை அணிந்திடும் முக்கண்ணா ஏ 
காந்தம் விரும்பிடும் நாதஸ்வ ரூபா 

நந்தியின் மீதே எழுந்தாய் போற்றி 
சந்தியா நேர இறைவனே போற்றி 
சிந்தியில் நிறைத்தாய் தேவா போற்றி 
எந்தையும் தாயும் ஆனாய் போற்றி 

வளியிடை நிறைந்தாய் பித்தா போற்றி 
வெளியினில் நிறைந்தாய் சித்தனே போற்றி
தெளிந்திட மனத்தினில் நிறைவாய் நிற்பாய் 
களித்து நடித்திடும் ஆண்டவா போற்றி . 

ப்ரதோஷாஷ்டகம்
சத்யம் ப்ரவீமி பரலோகஹிதம் ப்ரவீமி சாரம் ப்ரவீம்யும்பநிஷத்ருதயம் ப்ரவீமி /
சன்சார முன்பணமசார மவாப்ஜந்தோ; சாரோயமீஸ்வரபதாம் புருஷத்ய சேவா// 1 


யே நார்சயந்தி கிரீசம் சமே ப்ரதொஷயே நார்சிதம் சிவமபி ப்ரனமந்தி சானே/
ஏதத்கதாம் - ஸ்ருதிபுடைர்ண பிபந்தி மூடா ஸ்தே ஜன்மஜன்மஷூபவந்தி நாரா தரித்ரதா;// 2 


யேவை பிரதோஷ சமயே ப்ரமேச்வரஷ்ய சிர்வந்த்ய நன்யமான சொன்கிருத சரோஜ பூஜாம்/
நித்யம் ப்ரவ்ருத்த தனதான்ய கலத்ரபுத்ர சௌபாக்ய சம்பதாதிகாச்த இஹைவலோகே// 3 


கைலாச சைல புவனே தரிஜ கஜ்ஜ நித்ரீம் கௌரீம் நிவேஷ்ய கனகாஞ்சித ரத்னபீடே /
த்ருத்யம்விதாது மபிவாஞ்சதி சூவபாருணனே தேவாம்; பிரதோஷ 
சமயேனுபஜந்தி  சர்வே// 4 


வாக்தேவி த்ருதவல்லகீ சதமகோ வேணும் தத்தத் பத்ம ஜாஸ்தாலோன்னித்ரகரோ ரமா பகவதிகேய பிரயோகான்விதா/
விஷ்ணுச்சந்த்ர ம்ருதங்கவாதன படுதேர்வாஸ் சமந்தாத் ஸ்திதாரசே
வந்தே தமனு பிரதோஷ ஸமயே தேவம் ப்ருடாநிபதிதம்// 5 

கந்தர்வஜாக்ஷ பதகோரக ஷித்தஷாத்ய வித்யாதராமாவாரப் சரசாம் கனாஸ்ஸ/
யேன்ய த்ரிலோக நிலயாச்சஹா பூதவர்கா ப்ராப்ய பிரதோஷ சமையே ஹரபாஸ்வர சன்ஸ்தா// 6   

அத: ப்ரதோஷே ஸிவ ஏகஏவ பூஜ்யோத நான்யே ஹரிபத்மஜாத்யா/
தஸ்மின் மகேசே விதிநேஜ்யமானே சர்வே ப்ரசீதந்தி சூராகினாதா// 7  

ஏஷே தி தனியா: பூர்வஜன்மானி ப்ராஹ்மானோத்தம: பிரதிக்ஹைவர்யோ நித்ய ந தானாத்யைஸ் சூகமார்பி:// 8 

அதோ தாரித்ரமாபன்ன: புத்ரச்தே த்விஜபாமினி/
தத்தோஷ பரிஹாரத்த சாணப் யாது சங்கரம்// 9  
*****        


நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர் 


சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி 
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி
பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி 
பார்வதியின் சொல்கேட்டு சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி
செங்கரும்பு உணவுமாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மனகலங்கள் அனைத்தையுமே கொடுக்கும் நந்தி 
மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி
அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி 
வருங்காலம் நலமாக வைக்கும் நந்தி 
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி 
பேரருளை மாந்தருக்கும் வழங்கும் நந்தி
வரலாறு படைத்துவரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி
கெட்டகனா அத்தானையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம்காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிவிட விளையும் நந்தி
வேந்தன்நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்கவைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன் கூரிலே சாய்ந்த நந்தி 
செவிசாய்த்து அருள்கொடுக்கும் செல்வ நந்தி 
கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி
குடம்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
போன்போருளை வழங்கிடவே வந்த நந்தி 
புகழ்குவிக்க எம்இல்லம் வருக நந்தி.

நந்திகேஸ்வரர் பாடல்
திருமூலர்.

அப்பனை நந்தியை ஆரா அமுதனை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால் 
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே.

நந்தியருளாலே நாத நாம் பேருபெற்றோம்
நந்தியருளாலே மூலனை நாடி னோம்
நந்தியருளாவது என் செய்யும் நாட்டினில் 
நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே.
******

நந்தியம்பெருமான் தன்னை நாடொறும் வணங்குவோர்க்கு
புந்தியில்ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்!

சிந்தையில் அமைதி தோன்றும்! சிறப்புறு மக்கள் சேர்வர்!
இந்திரபோகம் கிட்டும்! இணையிலா வாழ்வுதானே!
********

தாயுமானவர் பாடல் 

ஆழழி கரையின்றி நிற்கவிலையோ கொடிய 
ஆலமமு தாக விலையோ?
அக்கடலின் மீதுவட வனல்நிற்க வில்லையோ?
அந்தரத் தகில கோடி
தாழாமல் நிலைநிற்க வில்லையோ? மேருவும் 
தனுவாக வளைய வில்லையோ? 
சத்தமே கங்களும் வச்ரதரன் ஆணையின் 
சஞ்சரித் திடவில்லையோ?

வள்ளலார் பாடல் 

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே 
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே 
அன்பெனும் கரத்து அமர் அமுதே 
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே 
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரமசிவமே!

வேண்டுகோள்

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் 
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான்சென்றே 
எந்தை நினது அருள்புகழை இயம்பி இடல் வேண்டும் 
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்தோங்க அருள்ஜோதி செலுத்தியிடல் வேண்டும் 
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் 
தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.


சுபம்.