Thursday, February 3, 2011

பிரதோஷ விரதம் பகுதி 6

பிரதோஷ விரதம் பகுதி 6
உலகம் இருண்டது, தேவர்களும் அசுரர்களும் பயந்து ஓடினார்கள். உலக உயிர்கள் எல்லாம் ஊழிக்காலம் உதித்துவிட்டதோ என்று பயந்து அலறினர். அதிகக் கண்ட மகாவிஷ்ணு, அந்த விஷத்திர்கேதிரே தன் ஆயுதங்களுடன் புகுந்தார். ஆனால் அந்தக் கொடிய நஞ்சு அவர்மேல் பரவி அவர் உடலைக் கறுப்பாக்கியது. விஷ்ணு கரியமேனிகொண்டவர் (நீல மேக சியாமளன்) என்று புராணங்கள் வர்நிக்கின்றனவே, அதற்க்குக் காரணம் இதுதான். விஷ்ணுவின் அம்சம்தான் கிருஷ்ணன், கிருஷ்ணன் என்றால் கருமை நிறம் கொண்டவன் என்று ஒரு பொருள் உண்டு.


அதே சமயத்தில், பாற்கடலில் அந்த நெஞ்சின் வெக்கை படர்ந்து அதிலிருந்தும் ஒருவித விஷம் வெளிப்பட்டது. ஆலம் என்றால் நஞ்சு. வாசுகி கக்கிய ஆலமும், பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட ஆலமும் ஒன்றாகி ஆலாலம் எனும் மிகக் கொடிய நஞ்சகியது. வேதனையும் சோதனையும் இருமடங்காகியது. ஆலாலம் வாட்டிய அந்த சமயத்தில்தான்  தேவர்களுக்கு ஞாபகம் வந்தது. தாங்கள் சூலாயுதபாணியை மறந்துவிட்டோம் என்று.


கயிலயங்கிரியை நோக்கி ஓடினார்கள். கையில் வெள்ளிப்பிரம்பு, உடைவாள் கொண்டு சிவபெருமானின் வாசஸ்தலத்தை நந்திதேவர் காத்து நிர்ப்பது தெரிந்தது. அவர் உத்திரவின்றி எவரும் நுழைய முடியாது.(இராவணன் போன்றவர்கள் தடையை மீறி நுழைந்ததால் ஏற்ப்பட்ட துன்பங்களை நாம் புராண வாயிலாக அறிகின்றோம்.)
தடுப்பாரோ நந்தி? தாமதமாகுமோ தயாபரனை தரிசிக்கத் தவிப்போடு விரைந்தனர் தேவர்கள்.
குறிப்பால் அவர்களின் குறை உணர்ந்தார் நந்திதேவர், தடுக்காமல் வழிவிட்டார். நந்தியின் ஆணைகிடைத்ததும் உட்புகுந்து நெற்றிக்கன்னனைத் தரிசித்து, அவரை வணங்காமல் பாற்கடலை கடையப்புகுந்ததின் விளைவை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் தங்கள் காரியம் தடையின்றி முடிந்து அமுதம் கிடைக்க அருளவேண்டும் எனக்கூறி வணங்கிநின்றனர்.

மிகுதியை பார்ட் 7ல் .paarkkavum

பிரதோஷ விரதம் (part 5 )

பிரதோஷ விரதம் (part 5 )
முப்பது முக்கோடி தேவர்களும் , உடனடியாகச்செயலில் இறங்கினர். பிரம்மன் வழிகாட்டிவிட்டார். பரந்தாமன் பார்கடலைக்கடைய அனுமதியளித்து வழிவிட்டுவிட்டார்.
மும்மூர்த்தியரில் இருவரை வேண்டியாகிவிட்டது. அதே சமயம், எப்படியாவது அசுரர்களை வெல்லவேண்டும் என்ற அவசரத்தில் தேவர்களுக்கு, ஆதிமூலமான சிவபெருமானை வணங்கி செயலில் இறங்கவேண்டும் என்ற நினைவு அற்றுப்போய்விட்டது. பார்கடலைக்கடைந்தால் அமுதம் கிடைக்கும் என்ற யோசனைகிடைத்த மகிழ்ச்சியில், மகேசனை மறந்தே விட்டனர். பாற்கடலில் யோகத்துயில்புரிபவன் திருமால் அல்லவே? 
அந்த மாதவனிடம் சென்று, அவன் ஆணைபெற்றதுமே பாற்கடலைக் கடயலாம் என்ற துணிவு துளிர்த்தது. தேவர்களுக்கு, கடையப் போவதோ பாற்கடல். சாதாரண காரியமா? அதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரிக்க வேண்டுமே?








மந்திர மலையே மத்தாகியது. அட்ட நாகங்களுள் ஒன்றான வாசுகி, கடைய உதவும் தாம்புக் கயிராகிறது. கடைய ஆரம்பித்தனர் அமரர்கள். அடிவாங்கியே அல்லல் பட்டுக்கிடந்த தேவர்கள், அரைக்கணம் கூட பாற்கடலைக் கடைய முடியாமல் பரிதவித்தனர். கலைத்தனர். தேவகுரு அவர்களைத்தேற்றினார். மந்தகுணம் உள்ள அசுரர்களை உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம் பங்கு பிரிக்கும்போது சமாளித்துக்கொள்ளலாம் என்று யோசனை சொன்னார்.


'சரி' என்று சம்மதித்தார்கள் தேவர்கள். அசுரர்களிடம் கேட்டார்கள். அவர்களும் 'சரி' என்று சொல்ல, வாசுகியின் வால்புறம் தேவர்களும் தலைப்புறம் அசுரர்களும் பிடித்துக் கடைய, மத்து கடலில் அமிழ்ந்துவிடாதிருக்க மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, மலையின் அடியையும் முடியையும் தன் முதுகினாலும், கைகளாலும் பற்றிக் கொண்டார்.


பாற்கடலுள் மத்து அமிழ்ந்து கடிதல் ஆரம்பமாகிறது. ஆயிரம் தலைகளும் கொடிய நஞ்சும் கொண்ட வாசுகி என்னும் நாகத்தை கயிராகச்சுற்றிக் கடந்தனர் அல்லவா? மலையின் மீது சுற்றி இழுக்கப்பட்டதால், வாசுகிக்குக் களைப்பு மேலிட்டது. வாயில் நுரை தள்ளியது. வியர்வை வழிந்து ஓடியது. அப்போது ஏற்ப்பட்ட வேதனையைத் தாங்க முடியாமல் பெருமூச்சுடன் நஞ்சையும் வெளிப்படுத்தியது, வாசுகி. அதன் ஆயிரம் வாய்களிளிருந்தும் விஷம் வெளிப்பட்டது. அகிலத்தையே அந்த விஷம் அச்சுறுத்தியது.
மிகுதியை பிரதோஷ விரதம் part 6ல் பார்க்கவும்