Sunday, February 13, 2011

What would happen 2012? tamil 7, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?

3 . உங்களால் முடிந்த அளவு அதிகமான குருமார்களை சந்தித்து அவர்களிடம் சக்தி தீக்ட்சை பெறுவது மிகவும் சிறந்ததாகும். இப்படி தீக்சை பெரும் போது மற்ற எந்த முறைகளிலும் கிடைக்கும் சக்தி ஓட்டத்தின் அளவைவிட இது மிகவும் அதிகமாகும். சில குருமார் தங்களின் ஒரு பார்வையில் அல்லது ஒரே ஒரு தொடுதலின் மூலம் முக்தியையே  கொடுப்பவர்களும் உண்டு. தற்போது உள்ள குறுகிய காலத்தில் இதுவே மிக சிறந்த வழியாகும். 

4 . முன்பே கூறியது போல். ஒரு குரு உபதேசித்த மூலமந்திரத்தை 24 மணி நேரமும் அதன் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும். அப்படி சொல்லி உரு ஏற்றும்போது நீங்கள் ருத்திராட்சை மாலையை கையில் வைத்து, மோதிரவிரலின் நுனியிலிருந்து முதல் கணுவில் மாலையை வைத்துக்கொண்டு பெருவிரலின் நுனியால் மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ  ஒவ்வொன்றாக தள்ளிக் கொண்டே மந்திரத்தை சொல்லுவதால், உங்களின் மூலாதார சக்கரம் தூண்டப்பட்டு சக்தி ஓட்டம் அதிகரிக்கும்.
4 இல் 1 .முதலில் மந்திரத்தை சத்தமாக சில காலம் சொல்ல வேண்டும்.
4 இல் 2 . சிறிது காலத்திற்கு பின் மந்திரத்தை உங்களின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி  சொல்ல வேண்டும்.
4 இல் 3. சிறிது காலத்திற்கு பின் மந்திரத்தை உங்களின் உதடுகள் அசையும்படி சத்தமில்லாமல் சொல்லவேண்டும்.
4 இல் 1 . சிறிது காலத்திற்கு பின் மந்திரம் உங்களுக்குள் மட்டும் அதாவது மனதிற்குள் மட்டும்  சொல்லவேண்டும். இப்படி செய்வதால் நீங்கள் 4வது நிலைக்கு வரும் பொழுது  ஒவ்வொரு முறையும் நீங்கள் மந்திரம் சொல்லும் பொழுது உங்களின் உடலில் சக்தி ஓட்டம் அதிகரிப்பதையும் அதனால் மின் காந்த அலை, உங்களின் முதுகெலும்பின் கீழிருந்து உச்சந்தலை வரை செல்வதை உணர்வீர்கள்.
இதன் மூலமும் உங்களின் மின் காந்த சக்தி வலையம் வலிமை அடைகிறது.
5 .சிவசூத்திரத்தில் உள்ள ஒவ்வொரு பயிர்ச்சியையும், ஒரு பயிற்சி 10 நாட்கள் விகிதம் செய்து பார்த்து அந்த அனுபவத்தை அடைந்ததும், அடுத்த 10 நாட்களுக்கு அடுத்த பயிற்சியை செய்து பார்க்கவேண்டும். இப்படி உங்களுக்கு முக்தி கிடைத்து விட்டது  என்று நீங்கள் உணரும் வரை, அதாவது நீங்கள் உணரும் வரை, சந்தேகம் இல்லாமல் நீங்கள் உணரும் வரை. செய்து முக்தியை உணர்ந்ததும் ஜீவன் முக்திக்கு முயற்சிக்கவேண்டும். முக்தி உங்களைக்காக்கும், ஆனால் ஜீவன் முக்தியின் மூலம் நீங்கள் மற்றவரைக்காக்க முடியும்.  

இதற்க்கு சில உதாரணங்களை பாகம் 8 இல் காண்போம்.   
 

Saturday, February 5, 2011

What would happen 2012? tamil 6, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?



இதற்கு என்ன செய்யவேண்டும்?
1  பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி)  
இது சரியாக அமர்ந்து அதாவது முதுகு, கழுத்து, தலை, இவை நேர் கோட்டில் இருப்பதாக அமர்ந்துகொண்டு மூச்சுப்பயிற்சி செய்யவும்.
இதனால் மனம் அமைதியடையும், அதாவது அடங்கும், அப்போது உங்களின் சக்திவிரயம் தடுக்கப்படும். மேலும் மின்காந்த வளையம் சக்தி பெரும். 
இது மட்டும் அல்ல பலவிதமான நோய்கள் அனைத்தும் குணமடைய மூச்சுப்பயிற்சி மிக சிறந்தது.


இப்போது இதை நாம் தமிழில் வீடியோவில் பார்க்கலாம். இந்த வீடியோவை தயவு செய்து முழுமையாக பார்த்து கவனமாக செய்யுங்கள். முழு ஆரோக்கியமும் பேர்ஆனந்தமும் பெறுங்கள்.

Yoga Health Fitness - Baba Ramdev - Pranayam - Tamil



Baba Ramdev - Yoga for the Youth - English - Yoga Health பிட்நெஸ்




அடுத்தது ஒரு குரு உபதேசித்த மந்திரத்தை முடிந்த வரை 24 மணி நேரமும் திரும்பத் திரும்ப சொல்லிகொடிருக்க வேண்டும். 

இப்படி சொல்லும்போது அதன் பொருள் உணர்ந்து சொல்லவேண்டும். முதலில் சிறிது காலம் சத்தமாக சொல்லவேண்டும். பின் உங்கள் காதுகளுக்கு கேட்கும்படி சொல்லவேண்டும். அதன்பின் சிலகாலம் உங்களுக்குள் சொல்லவேண்டும், ஆனால் உங்கள் உதடு மட்டும் அசையவேண்டும். அதன்பின் உள்ளுக்குள் மட்டுமே சொல்லவேண்டும். இப்படி நீங்கள் செய்யும் பொது உங்களின் உடலில் மின் ஓட்டம் ஏற்படுவதை நன்றாக உணரமுடியும். இந்த மிநோட்டமே, மின்காந்த சக்தியாகும். இந்த சக்தி அதிகமாகும் பொது உங்களின் மின்காந்த வளையம் பெரியதாகும், இதனால் நீங்களும் உங்களை சுற்றி உள்ளவர்களும் sun solar flash இல் இருந்து தப்புவது உண்மை. 

இது எப்படி நிகழ்கிறது? இதை பக்கம் 7 இல் பார்க்கவும்.     

Friday, February 4, 2011

What would happen 2012? tamil 5, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?

2012: The Polar Shift Explained 


What would happen 2012? tamil 5, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?

இப்போது இந்த மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து தப்பிப்பது எப்படி?


இதிலிருந்து தப்புவதற்கு ஒரு வழிதான் உள்ளது. உங்களின் மின்காந்த வளையத்தின் அளவையும் அதன் சக்தியையும் அதிகபடுத்துவதால், பூமியின் மின்காந்த அலை வளையத்தில் ஏற்ப்படும் தாக்கம், உங்களை பாதிக்காது. அதற்கு நாம் தினமும் தியானம் செய்யவேண்டும். தியானம் நமக்கு எப்படி உதவும் எனப் பார்ப்போம்.
how to meditate part:1
part:2
part:3

part:4


part:5

நமக்கு நேரம் மிக குறைவாக இருப்பதால், தியானம் மட்டும் நம் சக்தி வளையத்தை குறுகிய காலத்தில் அதிகமாக்குமா என்பது சந்தேகமே, ஆகையால் ஒன்றுக்கு பதிலாக பலவழிகளில் நாம் முயற்சிக்க வேண்டும். அதனால் அதிகமான குருமார்களை தரிசித்து அவர்களிடம் ஆசி பெறவேண்டும். அவர்களின் ஆசியின் மூலம் உங்களின் சக்தி மிக விரைவில் உச்சத்தை அடையும். சில குருமார்கள் தீட்சை கொடுப்பார்கள், இந்த தீட்சை முறை மிகவும் சக்திவாய்ந்தது. இப்படி தீட்சை பெறுவதால் உங்களின் குண்டலினி சக்தி மேலெழும்பி மூலாதாரத்தில் இருந்து சாஹஸ்ராரதிர்க்கு சென்று திரும்புவதாலும், இதுபோல் பலமுறை உங்களுக்கு நிகழ்ந்தால்,  உங்களின் மின்காந்த வளையத்தின் அளவு பெரியதாகிறது, சக்தியும் அதிகமாகிறது, விளைவு உங்களை முக்திநிலைக்கு கொண்டு செல்கிறது. இப்படி முக்தி கிடைத்தவர்கள், இந்த sun solar flash எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அத்துடன் அவர்களின் அருகில் இருப்பவர்களையும் பாதுகாககூடியது. அதாவது அவர்களின் மின்காந்த வலயத்திற்குள் மற்றவர்கள் இருக்கும் நிலையில், எந்தவிததாக்கத்திற்கும் உள்ளாக மாட்டார்கள். உதாரணமாக நீங்கள் சில குருமார்களின் அருகில் சென்றாலே உங்களின் உடல் நடுங்கத்தொடங்கிவிடும், கண்களில் நீர் வடத்தொடங்கும், மேலும் சிலர் நினைவிழந்து விழுந்து விடுவார்கள். இப்படி ஏற்படுவதற்கு காரணம், குருவின் மின்காந்த வளையம் மிகப்பெரியதாகவும், மிகசக்திவாய்ந்ததாகவும் இருப்பதேயாகும். நீங்கள் இன்றிலிருந்து கடுமையாக முயற்ச்சித்தால் மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் உங்களின் சக்தி வளையத்தை வலிமையாக்கமுடியும்.  இதை இப்போதே துவங்கினால், நீங்களும் உங்களைச்சுற்றிஇருப்பவர்களும் தப்பலாம்.

இதற்கு என்ன செய்யவேண்டும்? இதன் தொடர்ச்சியை பாகம் 6 இல் பார்க்கவும்.    

2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 4

2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 4 

இப்போது அந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். இந்த தாக்கத்தால் பூமி தன் பாதையிலிருந்து வெளியில் செல்வதால். அந்த நேரத்தில் பூமியின் மின்காந்தவளையம் தாக்கப்படுவதால், மனிதனின் மின்காந்த வளையம் தாக்கப்படுகிறது. இதனால் நம் pituitary gland அதாவது குண்டலினி யோகத்தில் கூறுகின்ற 6 வது சக்கரமாகிய ஆக்ஞா சக்கரம் தாக்கப்படும். அதன் காரணமாக நம் மூளையும் தாக்கப்பட்டு ஞாபகசக்க்தியை இழக்கநேரிடும் மேலும் மனநிலை பாதிக்கபடுவதர்க்கும் அதிக சந்தர்ப்பம் உள்ளது., அத்துடன் மூளையின் தாக்கத்தால் இருதயம் பாதிக்கப்படும். நம் எண்ணங்களெல்லாம் பூமி பயணிக்கும் பாதையில் பதிந்திருப்பதால் பூமி திரும்பி தன் கூட்டுக்கு வரும் பொது நம் பழைய நினைவுகள் எதுவும் நினைவில் இருக்காது. அப்போது உங்களின் மனநிலை பாதிக்கப்படும். மேலும் என்ன நடக்கும் என்று பாப்போம்.  
  Solar Tsunami 2012 in English     

மேலும் காரணமில்லாமல் ஆட்கள் மயங்கிவிளுவர், காரணமில்லாமல் இறந்துபோவர், கைகால்கள் இழுத்துவிடும், காரணமில்லாமல் தற்கொலை செய்துகொள்வர். இப்படி பல விதமான துன்பங்கள் நம் உடலுக்கும் மனதுக்கும் ஏற்ப்படும். 

இப்போது வெளியில் அதாவது உலகத்தில் என்ன என்ன நடக்கும் என்று பாப்போம். 
பூகம்பம், சுனாமி, சூரவழிக்காற்று, அதிக மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மழை இல்லாமல் ஏற்படும் வறட்சி, உணவு தட்டுப்பாடு, புதுப்புது நோய்களும் அதற்கு மருந்து இல்லாத நிலை. போன்றவற்றைகூரலாம்.
2012 POLE SHIFT - A FACT

What would happen 2012? tamil 3, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?

2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 3  
ஆனால் பல வருடங்களாக இந்த sun solar flash சூரியனில் நிகழாமல் இருக்கிறது. ஆகவே 2012 Dec இல் வர இருக்கும் sun solar flash மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று அந்த நேரத்தில் பூமி சூரியனின் நேர்கோட்டில் வர இருப்பதாகவும், அப்படி sun flash வரும் நேரம் அதன் அழுத்தத்தால் பூமி தன் வட்டப்பாதையில் இருந்து விழகி பின் திரும்பவும் தன் நிலைக்கு வந்து விடும். இப்படி நடக்கும் பொது பூமி தன் பாதையிலிருந்து விளத்திச் சென்று பின் மீண்டும் தன் நிலைக்கு வரும்போது எடுத்துக் கொள்ளும் காலம் 3 நாட்களாகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
  
Nasa Response to 2012 Claim

இதையே நம் இந்துமதம் மஹா பிரதொசகாலம் என்றும், மஹா பிரளயகாலம் என்றும் கூறுகின்றது. கிறிஸ்தவர்கள் 3 இருட்டு நாட்கள் வர இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். அதாவது the 3 dark days என்கின்றனர். முகமதியர்கள் (முஸ்லீம்ஸ்)  கூறுகின்றனர் இரண்டு இருட்டு நாட்கள் அல்லது ஒரு இரவு முடியும் நேரம் சூரியன் உதயமாகாமல் இருட்டாகவே இருக்கும் அது இரண்டாவது இரவாகத் தொடரும் அதன் முடிவிலேயே சூரியன் விதிக்கும் ஆனால் இப்போது சூரியன் மேற்கில் உதிக்கும், என்கின்றனர். இதனை நாம் இந்த you tube clip இல் பார்ப்போம்.
Everything 2012 pole shift 



ஆனால் சூரியன் எங்கு உதிக்கின்றதோ அந்த திசையே கிழக்கு, பூமி திரும்பினாலும் சூரியன் உதிக்கும் திசையே கிழக்கு இது எந்தகாலத்திலும் பொருந்தும். அப்படி மேற்கில் உதித்தாலும் அன்று முதல் அந்த திசை நமக்கு கிழக்காகிவிடும் என்பதே உண்மை. இதன் தொடர்ச்சியை 4 இல் பார்க்கவும். 
2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 4

Thursday, February 3, 2011

பிரதோஷ விரதம் பகுதி 6

பிரதோஷ விரதம் பகுதி 6
உலகம் இருண்டது, தேவர்களும் அசுரர்களும் பயந்து ஓடினார்கள். உலக உயிர்கள் எல்லாம் ஊழிக்காலம் உதித்துவிட்டதோ என்று பயந்து அலறினர். அதிகக் கண்ட மகாவிஷ்ணு, அந்த விஷத்திர்கேதிரே தன் ஆயுதங்களுடன் புகுந்தார். ஆனால் அந்தக் கொடிய நஞ்சு அவர்மேல் பரவி அவர் உடலைக் கறுப்பாக்கியது. விஷ்ணு கரியமேனிகொண்டவர் (நீல மேக சியாமளன்) என்று புராணங்கள் வர்நிக்கின்றனவே, அதற்க்குக் காரணம் இதுதான். விஷ்ணுவின் அம்சம்தான் கிருஷ்ணன், கிருஷ்ணன் என்றால் கருமை நிறம் கொண்டவன் என்று ஒரு பொருள் உண்டு.


அதே சமயத்தில், பாற்கடலில் அந்த நெஞ்சின் வெக்கை படர்ந்து அதிலிருந்தும் ஒருவித விஷம் வெளிப்பட்டது. ஆலம் என்றால் நஞ்சு. வாசுகி கக்கிய ஆலமும், பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட ஆலமும் ஒன்றாகி ஆலாலம் எனும் மிகக் கொடிய நஞ்சகியது. வேதனையும் சோதனையும் இருமடங்காகியது. ஆலாலம் வாட்டிய அந்த சமயத்தில்தான்  தேவர்களுக்கு ஞாபகம் வந்தது. தாங்கள் சூலாயுதபாணியை மறந்துவிட்டோம் என்று.


கயிலயங்கிரியை நோக்கி ஓடினார்கள். கையில் வெள்ளிப்பிரம்பு, உடைவாள் கொண்டு சிவபெருமானின் வாசஸ்தலத்தை நந்திதேவர் காத்து நிர்ப்பது தெரிந்தது. அவர் உத்திரவின்றி எவரும் நுழைய முடியாது.(இராவணன் போன்றவர்கள் தடையை மீறி நுழைந்ததால் ஏற்ப்பட்ட துன்பங்களை நாம் புராண வாயிலாக அறிகின்றோம்.)
தடுப்பாரோ நந்தி? தாமதமாகுமோ தயாபரனை தரிசிக்கத் தவிப்போடு விரைந்தனர் தேவர்கள்.
குறிப்பால் அவர்களின் குறை உணர்ந்தார் நந்திதேவர், தடுக்காமல் வழிவிட்டார். நந்தியின் ஆணைகிடைத்ததும் உட்புகுந்து நெற்றிக்கன்னனைத் தரிசித்து, அவரை வணங்காமல் பாற்கடலை கடையப்புகுந்ததின் விளைவை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் தங்கள் காரியம் தடையின்றி முடிந்து அமுதம் கிடைக்க அருளவேண்டும் எனக்கூறி வணங்கிநின்றனர்.

மிகுதியை பார்ட் 7ல் .paarkkavum

பிரதோஷ விரதம் (part 5 )

பிரதோஷ விரதம் (part 5 )
முப்பது முக்கோடி தேவர்களும் , உடனடியாகச்செயலில் இறங்கினர். பிரம்மன் வழிகாட்டிவிட்டார். பரந்தாமன் பார்கடலைக்கடைய அனுமதியளித்து வழிவிட்டுவிட்டார்.
மும்மூர்த்தியரில் இருவரை வேண்டியாகிவிட்டது. அதே சமயம், எப்படியாவது அசுரர்களை வெல்லவேண்டும் என்ற அவசரத்தில் தேவர்களுக்கு, ஆதிமூலமான சிவபெருமானை வணங்கி செயலில் இறங்கவேண்டும் என்ற நினைவு அற்றுப்போய்விட்டது. பார்கடலைக்கடைந்தால் அமுதம் கிடைக்கும் என்ற யோசனைகிடைத்த மகிழ்ச்சியில், மகேசனை மறந்தே விட்டனர். பாற்கடலில் யோகத்துயில்புரிபவன் திருமால் அல்லவே? 
அந்த மாதவனிடம் சென்று, அவன் ஆணைபெற்றதுமே பாற்கடலைக் கடயலாம் என்ற துணிவு துளிர்த்தது. தேவர்களுக்கு, கடையப் போவதோ பாற்கடல். சாதாரண காரியமா? அதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரிக்க வேண்டுமே?








மந்திர மலையே மத்தாகியது. அட்ட நாகங்களுள் ஒன்றான வாசுகி, கடைய உதவும் தாம்புக் கயிராகிறது. கடைய ஆரம்பித்தனர் அமரர்கள். அடிவாங்கியே அல்லல் பட்டுக்கிடந்த தேவர்கள், அரைக்கணம் கூட பாற்கடலைக் கடைய முடியாமல் பரிதவித்தனர். கலைத்தனர். தேவகுரு அவர்களைத்தேற்றினார். மந்தகுணம் உள்ள அசுரர்களை உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம் பங்கு பிரிக்கும்போது சமாளித்துக்கொள்ளலாம் என்று யோசனை சொன்னார்.


'சரி' என்று சம்மதித்தார்கள் தேவர்கள். அசுரர்களிடம் கேட்டார்கள். அவர்களும் 'சரி' என்று சொல்ல, வாசுகியின் வால்புறம் தேவர்களும் தலைப்புறம் அசுரர்களும் பிடித்துக் கடைய, மத்து கடலில் அமிழ்ந்துவிடாதிருக்க மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, மலையின் அடியையும் முடியையும் தன் முதுகினாலும், கைகளாலும் பற்றிக் கொண்டார்.


பாற்கடலுள் மத்து அமிழ்ந்து கடிதல் ஆரம்பமாகிறது. ஆயிரம் தலைகளும் கொடிய நஞ்சும் கொண்ட வாசுகி என்னும் நாகத்தை கயிராகச்சுற்றிக் கடந்தனர் அல்லவா? மலையின் மீது சுற்றி இழுக்கப்பட்டதால், வாசுகிக்குக் களைப்பு மேலிட்டது. வாயில் நுரை தள்ளியது. வியர்வை வழிந்து ஓடியது. அப்போது ஏற்ப்பட்ட வேதனையைத் தாங்க முடியாமல் பெருமூச்சுடன் நஞ்சையும் வெளிப்படுத்தியது, வாசுகி. அதன் ஆயிரம் வாய்களிளிருந்தும் விஷம் வெளிப்பட்டது. அகிலத்தையே அந்த விஷம் அச்சுறுத்தியது.
மிகுதியை பிரதோஷ விரதம் part 6ல் பார்க்கவும் 





Wednesday, February 2, 2011

பிரதோஷ விரதம்.4

பிரதோஷ விரதம்.4
விளக்கம் தெரிந்து கொண்டு ஆண்டவனை வழிபட்டால் ஆயிரமாயிரம் பலன்கள் கிட்டும் என்பதே உண்மை.
அதுமட்டுமல்ல, அரணுக்கு மட்டுமே உரித்தானது. பிரதோஷ காலம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலர், ஹரிக்கும் உகந்தது பிரதோஷ வழிபாரு என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டாமா?
ஏற்றங்கள் பலவும், அளவும் நலமும் அளிக்கக் கூடியதுமான பிரதோஷ விரதத்தினைக்கடைபிடிக்க தனித்தன்மையுடன் சரியான வழியைக்காட்ட போகிறது. வாருங்கள் ஒவ்வொன்றாகப்பார்ப்போம்.
'பிர' என்றால், அளவிட முடியாத, மிக மிக அதிகமான என்று பொருள்.


'தோஷம்' என்பதற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை, தீவினைகள் என்று பொருள்.
'பிரதோஷம்' என்றால் அதீதமான தீவினைகள் தோன்றக்கூடிய நேரம்.


என்ன இது. பிரதோஷ காலம் மிகமிக உயர்வானது. என்றல்லவா நினைத்தோம்! இப்படிச்சொல்கிரீர்களே! என்று உங்களில் பலர் கேட்டது புரிகிறது. அதைத் தெரிந்துகொள்ள நீங்கள், பிரதோஷம் பிறந்த கதையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.



பிரதோஷம் பிறந்த கதை.
தேவர்களும் அசுரர்களும் அடிக்கடி போரிட்டுக்கொண்டிருந்தகாலம் அது! தீவினைகளின் மொத்த உருவமான அசுரர்கள், சளைக்காமல் சண்டை போட்டதால், சமாளிக்க முடியாமல் தவித்தனர் தேவர்கள். குறையாத பலமும் குன்றாத ஆரோக்கியமும் பெறவேண்டுமானால், பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலைக் கடந்து, வெளிப்படும் அமுதத்தை அருந்த வேண்டும் என்று ஆலோசனை சொன்னார், ஸ்ரீ பிரம்ம
தேவர்.
மிகுதியை பகுதியை 5ல் பார்க்கவும்.







பிரதோஷ விரதம்.


பிரதோஷ விரதம்.
நாமவர் புலம் பெயர்ந்து வந்து வாழும் நாடுகளிலேயே, ஒரு புண்ணிய பூமியாக இருப்பது கனடா திருநாடே. இங்கிருப்போரில் பலரும் அறிந்திராத, ஒரு சிலரே அறிந்திருந்தாலும் அவர்களிலும் வெகுசிலருக்கு மட்டுமே இந்த பிரதோஷ விரதம் பற்றித்தேரிந்துள்ளனர். இந்த குறையை நிறையக்குவதும், இந்த மகத்தான விரதத்தின் மூலம் பதினாறு செல்வமும் பெற்று, பேரின்ப பெருவாழ்வு பெற்று வழிகாட்டுவதே இப்புத்தகத்தின் தலையாய நோக்கமாகும்.
                    மாதத்திற்கு இருமுறை வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி தினமே பிரதோஷம் என்ற பெயரில் சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் கொண்டாடப்பருகிறது.

                     இதே நேரத்தில் வைஷ்ணவர்களும் ஸ்ரீ விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இதற்குக்காரணம் இந்த பிரதோஷ நேரத்திலேயே ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதரித்த நேரமாகும். இவர் இந்த உலகில் இருக்கும் நோய்கள் மற்றும் இனி மனிதர்களாலும் மிருகங்களாலும் வரவிருக்கும் அனைத்து நோய்களையும் போக்கவல்ல வைத்தியநாதனாக வந்தவரே ஸ்ரீ தன்வந்திரி பகவான்.

அன்றைய தினம் சிவ வழிபாரும் சிவ தரிசனமும் மிக மிக சிறந்த பலன்களைத்தரும். இப்போது நாம், பிரதோஷ தினத்திற்கு அப்படி என்ன சிறப்பு? 
அன்றைய தினம் சிவ வழிபாட்டை எப்படி செய்தால் என்ன பலன் கிட்டும்?
பிரதொசத்திற்கும் நந்திபகவானுக்கும் என்ன தொடர்பு?
நந்திதேவரை வழிபடவேண்டிய முறை என்ன?
நந்திதேவருக்கு உகந்த நிவேதனம் எது?
பிரதோஷ தினத்தன்று சிவாலயங்களில் பிரத்தியேகமாக பிரதட்சணம் (வழமைக்கு மாறாக சுவாமியை சுற்றி வருவது) வருவது எதனால்?
இப்படியான பலப்பல கேள்விகளுக்கு பதில்களை பாகம் 3ல் பார்ப்போம்