Wednesday, February 2, 2011

பிரதோஷ விரதம்.4

பிரதோஷ விரதம்.4
விளக்கம் தெரிந்து கொண்டு ஆண்டவனை வழிபட்டால் ஆயிரமாயிரம் பலன்கள் கிட்டும் என்பதே உண்மை.
அதுமட்டுமல்ல, அரணுக்கு மட்டுமே உரித்தானது. பிரதோஷ காலம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலர், ஹரிக்கும் உகந்தது பிரதோஷ வழிபாரு என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டாமா?
ஏற்றங்கள் பலவும், அளவும் நலமும் அளிக்கக் கூடியதுமான பிரதோஷ விரதத்தினைக்கடைபிடிக்க தனித்தன்மையுடன் சரியான வழியைக்காட்ட போகிறது. வாருங்கள் ஒவ்வொன்றாகப்பார்ப்போம்.
'பிர' என்றால், அளவிட முடியாத, மிக மிக அதிகமான என்று பொருள்.


'தோஷம்' என்பதற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை, தீவினைகள் என்று பொருள்.
'பிரதோஷம்' என்றால் அதீதமான தீவினைகள் தோன்றக்கூடிய நேரம்.


என்ன இது. பிரதோஷ காலம் மிகமிக உயர்வானது. என்றல்லவா நினைத்தோம்! இப்படிச்சொல்கிரீர்களே! என்று உங்களில் பலர் கேட்டது புரிகிறது. அதைத் தெரிந்துகொள்ள நீங்கள், பிரதோஷம் பிறந்த கதையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.



பிரதோஷம் பிறந்த கதை.
தேவர்களும் அசுரர்களும் அடிக்கடி போரிட்டுக்கொண்டிருந்தகாலம் அது! தீவினைகளின் மொத்த உருவமான அசுரர்கள், சளைக்காமல் சண்டை போட்டதால், சமாளிக்க முடியாமல் தவித்தனர் தேவர்கள். குறையாத பலமும் குன்றாத ஆரோக்கியமும் பெறவேண்டுமானால், பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலைக் கடந்து, வெளிப்படும் அமுதத்தை அருந்த வேண்டும் என்று ஆலோசனை சொன்னார், ஸ்ரீ பிரம்ம
தேவர்.
மிகுதியை பகுதியை 5ல் பார்க்கவும்.







No comments:

Post a Comment