Friday, October 4, 2013

கரு உருவாதலின் ரகசியம்

கரு உருவாதலின் ரகசியம்


பொதுவாக உடல் உறவின்போது ஓர் ஆணுக்கு 

ஏறக்குறைய 1.5 மி. லி. முதல் 3.5 மி.லி. வரையில்

 விந் து வெளியேறும். ஒவ்வொரு மி.லி. விந்திலும்

 கோடிக்கணக்கான உயி ரணுக்கள் இருக்கும். 

எப்போது உட ல் உறவு வைத்துக் கொ ண்டாலும் 60 

முதல் 450 மில்லியன் உயிரணு க்கள் கரு முட்டை யைச்

 சந்திக்கத் தயாராக இருக்கும். உடல் உறவின் போது 

பெண்ணின் ஜனன உறுப்பில் பீய்ச்சப்படும் விந்தில்

 உள்ள உயிர் அணுக்கள் பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் 

சென்று, ஃபெலோபிய ன் குழாய் வழியாகப் பயணித்து 

முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சந்திக்க கிட்டத்தட்ட 

1 முதல் 5 மணி நேரம் ஆகும். இந்தப் பயணத்தி ல் லட்சக்

கணக்கான உயிர் அணுக்கள் இறந்துவிடும். கடைசியாக 

சுமார் 3,000 உயிர் அணுக்கள் மட்டுமே ஃபெலோபிய ன்

 குழாயைச் சென்றடையும். இதிலும் முதிர்ச்சி அடைந்த 

முட்டையைச் சந்திப் பது சில நூறு உயிர் அணுக்கள்தான்.

 இவற்றில் ஒரே ஓர் உயிர் அணு மட்டும் தான்

 முதிர் ச்சி அடைந்த முட்டையைத் துளைத்துக் 

கொண்டு உள்ளே நுழைந்து கருவாகும்.

உயிர் அணுவை நுண்ணோக்கி வழியா கப் பார்த்தால் 

அதற்கு ஒரு தலை, உடம் பு, வால் பகுதி இருப்பதைப்

 பார்க்கலாம். இந்த வால் பகுதியால்தான் உயிர் அணு

 நீச்சல் அடித்து முன்னேறுகி றது. உயிர் அணுவின் 

தலைப் பகுதியில் சில ரசாயன என்சைம்கள் இருக்கும்.

 அந்த என்சைம்கள் கரு முட் டையின் சுவரை அரித்து 

ஒரு சிறு துவாரம் உண்டாக்கும். அது வழியாக ஒரே ஓர்

 உயிர் அணுவின் தலையில் இருக்கும் நியூக் ளியஸ் 

மட்டும் உள்ளே நுழை ந்துவிடும். உயிர் அணுவின் தலை,

 உடம்பு, வால் பகுதிகள் உள்ளே போகாது. கருமுட்டை

 யில் இருக்கும் நியூக்ளியஸு ம் உயிரணுவில் இருக்கும் 

நி யூக்ளியஸும் ஒன்று சேருவத னால் கர்பம் உண்டாகி

விடும். பின், இப்படி ஒன்று கலந்த நியூக்ளியஸ் ஒன்று 

இரண்டா கி, இரண்டு நான் காகும்… இப் படியே பல்கிப்

பெருகி ஒரு வாரம் கழித்து ஒரு பெரிய பந்து மாதிரி 

உருவாகி எண் டோமெட்ரீயத்தில் வந்து உட்கார்ந்து 

கொள்ளும்.

ஒரு பெண்ணின் கரு முட்டை முதிர்ச்சி அடைந்து 

இருந்தால் ஒரே ஒரு தடவை உறவுவைத்துக்

கொண்டால்கூட கர்பம் தரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள்

 உண்டு.

இன்னும் சிலர் ‘சில குறிப்பிட்ட நாட்களில் உறவு 

வைத்துக்கொ ண்டால் கர்பம் தரிக்காது’ என்று 


உத்தேசமாகச் சொல்வார்கள். அது , அந்தந்தப் 

பெண்ணி
ன் மாத விடா ய்ச் சுழற்சி சரியாக உள்ளதா

 என்ப தைப் பொறுத்தது.


நன்றி, இணையதளத்தில் கிடைத்தது

No comments:

Post a Comment